spot_imgspot_imgspot_imgspot_img
Homeதிருக்குறள்114 - நாணுத் துறவுரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

114 – நாணுத் துறவுரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

114 - நாணுத் துறவுரைத்தல் ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1131. காமம் உழந்து வருந்தினார்க் கேம
          மடலல்ல தில்லை வலி

கலைஞர் குறல் விளக்கம்காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக, மடலூர்தலைத் தவிர. வலிமையான துணை வேறு எதுவுமில்லை.

we-r-hiring

1132. நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
          நாணினை நீக்கி நிறுத்து

கலைஞர் குறல் விளக்கம்எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.

1133. நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
         காமுற்றார் ஏறும் மடல்

கலைஞர் குறல் விளக்கம்நல்ல ஆண்மையையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்.

1134. காமக் கடும்புனால் உய்க்குமே நாணொடு
          நல்லாண்மை என்னும் புணை

கலைஞர் குறல் விளக்கம்காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது.

1135. தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
          மாலை உழக்கும் துயர்

கலைஞர் குறல் விளக்கம்மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்.

1136. மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
          படலொல்லா பேதைக்கென் கண்

கலைஞர் குறல் விளக்கம்காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன: எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

1137. கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
          பெண்ணிற் பெருந்தக்க தில்

கலைஞர் குறல் விளக்கம்கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும் கூடப் பொறுத்துக்கொண்டு. மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை.

1138. நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்
          மறையிறந்து மன்று படும்

கலைஞர் குறல் விளக்கம்பாவம் இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர் என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்.

1139. அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்
          மறுகின் மறுகும் மருண்டு

கலைஞர் குறல் விளக்கம்என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும் !

1140. யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
          யாம்பட்ட தாம்படா ஆறு

கலைஞர் குறல் விளக்கம்காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்.

MUST READ