spot_imgspot_imgspot_imgspot_img
Homeதிருக்குறள்115 - அலர் அறிவுறுத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

115 – அலர் அறிவுறுத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

115 - அலர் அறிவுறுத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1141. அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
          பலரறியார் பாக்கியத் தால்

கலைஞர் குறல் விளக்கம்எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள்.

we-r-hiring

1142. மலரன்ன கண்ணாள் அருமை அறியா
          தலரெமக் கீந்ததிவ் வூர்

கலைஞர் குறல் விளக்கம்அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது.

1143. உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
          பெறாஅது பெற்றன்ன நீர்த்து

கலைஞர் குறல் விளக்கம்எமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா? அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே!

1144. கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்
          தவ்வென்னும் தன்மை இழந்து

கலைஞர் குறல் விளக்கம்ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய்விடும்.

1145. களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
          வெளிப்படுந் தோறும் இனிது

கலைஞர் குறல் விளக்கம்காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும்.

1146. கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
          திங்களைப் பாம்புகொண் டற்று

கலைஞர் குறல் விளக்கம்காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் “கிரகணம்” எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர்முழுவதும் அலராகப் பரவியது.

1147. ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
          நீராக நீளுமிந் நோய்

கலைஞர் குறல் விளக்கம்ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது.

1148. நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
          காமம் நுதுப்பேம் எனல்

கலைஞர் குறல் விளக்கம்ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது. எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்.

1149. அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார்
          பலர்நாண நீத்தக் கடை

கலைஞர் குறல் விளக்கம்உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?

1150. தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
          கௌவை எடுக்குமிவ் வூர்

கலைஞர் குறல் விளக்கம்யாம் விரும்புகின்றவாறு ஊரார் அலா் தூற்றுகின்றனர்; காதலரும் விரும்பினால் அதை ஒப்புக் கொள்வார்.

MUST READ