spot_imgspot_imgspot_imgspot_img
Homeதிருக்குறள்38 – ஊழ் - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

38 – ஊழ் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

38 – ஊழ் - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

371. ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
        போகூழால் தோன்று மடி

கலைஞர் குறல் விளக்கம்  – ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும். ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கை நிலை சோம்பலை ஏற்படுத்தும்.

we-r-hiring

372. பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
        ஆகலூ ழுற்றக் கடை

கலைஞர் குறல் விளக்கம்  – அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்: ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்.

373. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
        உண்மை யறிவே மிகும்

கலைஞர் குறல் விளக்கம்  – கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.

374. இருவே றுலகத் தியற்கை திருவேறு
        தெள்ளிய ராதலும் வேறு

கலைஞர் குறல் விளக்கம்  – உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும். ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.

375. நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
        நல்லவாஞ் செல்வஞ் செயற்கு

கலைஞர் குறல் விளக்கம்  – நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை  எனப்படும்.

376. பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
        சொரியினும் போகா தம

கலைஞர் குறல் விளக்கம்  – தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும் உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.

377. வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
        தொகுத்தார்க்குந் துய்த்த லரிது

கலைஞர் குறல் விளக்கம்  – வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப்பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்.

378. துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
        ஊட்டா கழியு மெனின்

கலைஞர் குறல் விளக்கம்  – நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்.

379. நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
       அல்லற் படுவ தெவன்

கலைஞர் குறல் விளக்கம்  – நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள். தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?

380. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
        சூழினுந் தான்முந் துறும்

கலைஞர் குறல் விளக்கம்  – இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?

MUST READ