spot_imgspot_imgspot_imgspot_img
Homeதிருக்குறள்98 – பெருமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

98 – பெருமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது!

971. ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்
        கஃதிறந்து வாழ்தும் எனல்

கலைஞர் குறல் விளக்கம்ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமே யாகும். ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.

we-r-hiring

972. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
        செய்தொழில் வேற்றுமை யான்

கலைஞர் குறல் விளக்கம்பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.

973. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
        கீழல்லார் கீழல் லவர்

கலைஞர் குறல் விளக்கம்பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்.

974. ஒருமை மகளிரே போலப் பெருமையும்
        தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு

கலைஞர் குறல் விளக்கம்தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்.

975. பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
        அருமை யுடைய செயல்

கலைஞர் குறல் விளக்கம்அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்.

976. சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
        பேணிக்கொள் வேமென்னும் நோக்கு

கலைஞர் குறல் விளக்கம்பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம். அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை.

977. இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
        சீரல் லவர்கண் படின்

கலைஞர் குறல் விளக்கம்சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை.

978. பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
        அணியுமாம் தன்னை வியந்து

கலைஞர் குறல் விளக்கம்பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.

979. பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
        பெருமிதம் ஊர்ந்து விடல்

கலைஞர் குறல் விளக்கம்ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும். ஆணவத்தின் எல்லைக்கே சென்றுவிடுவது சிறுமை எனப்படும்.

980. அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
       குற்றமே கூறி விடும்

கலைஞர் குறல் விளக்கம்பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய குற்றங்களையே கூறிக் கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்.

MUST READ