சர்தார் 2 படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் கார்த்தி தற்போது வா வாத்தியார், மெய்யழகன் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில் மெய்யழகன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 27 அன்று திரைக்கு வர இருக்கிறது. அதேசமயம் நடிகர் கார்த்தி, கங்குவா 1 மற்றும் கங்குவா 2 ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவர் சர்தார் 2 எனும் திரைப்படத்திலும் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான திரைப்படம் தான் சர்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது சர்தார் 2 திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி பூஜையும் நடத்தப்பட்டது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் சர்தார் 2 திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. அனேகமாக எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரைத் தொடர்ந்து நடிகை மாளவிகா மோகனன் மற்றும் ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் இணைந்துள்ளதாக படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி சென்னையில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறதாம். அது மட்டுமில்லாமல் ஐரோப்பிய நாடுகள் போன்ற பல வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாம். இருப்பினும் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.