spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிகாந்திஜெயந்தியை ஒட்டி மோரை ஊராட்சியில் கிராமசபை கூட்டம்... டாஸ்மாக் கடைகளை அகற்ற மக்கள் கோரிக்கை

காந்திஜெயந்தியை ஒட்டி மோரை ஊராட்சியில் கிராமசபை கூட்டம்… டாஸ்மாக் கடைகளை அகற்ற மக்கள் கோரிக்கை

-

- Advertisement -

ஆவடி அடுத்த மோரை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

we-r-hiring

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ஆவடி அடுத்த மோரை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திவாகர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிராம மக்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்.

இதில் கன்னியம்மன் நகர் பகுதியில் சுமார் 5000 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் கன்னியம்மன் நகர் தொடங்கி சென்னை பாரிமுனை, எழும்பூர், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், குடியிருப்பு பகுதிகளை சுற்றுயுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று ஊராட்சி மன்ற தலைவர் திவாகர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

தொடர்ந்து.மோரை ஊராட்சியில் 5 ஆண்டுகளில் சிறப்பாக செயலாற்றிய ஊராட்சிமன்ற தூய்மை பணியாளர்களுக்கு ஷீல்டுகள் வழங்கி சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சி துவக்கத்தின்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு, தேசிய தன்னார்வ ரத்த தானம், எய்ட்ஸ் குறித்த உறுதிமொழியை கிராம பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர்.

MUST READ