Homeசெய்திகள்இந்தியாமக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - சத்தீஷ்கர் முதல்வர்

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – சத்தீஷ்கர் முதல்வர்

-

- Advertisement -

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – சத்தீஷ்கர் முதல்வர்

மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவில் நடத்த வேண்டும் என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கணக்கெடுப்பு Census

we-r-hiring

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பூபேஷ் பாகல், நிலக்கரி ராயல்டி, ஜிஎஸ்டி இழப்பீடு விவகாரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் ஜி 20 குழு கூட்டத்தின் செயல் திட்டம் குறித்து ஆலோசித்ததாக கூறினார்.

மேலும், ஜூன் 2022 முதல் தற்போது வரையிலான நிலுவை ஜிஸ்டி தொகையை வழங்க வேண்டும் என, பிரதமரிடம் கேட்டு கொண்டதாக பூபேஷ் பாகல் கூறினார்.

செப்டம்பர் மாதம் சத்தீஸ்கரில் நடைபெறும் ஜி 20 விருந்தினர்களுக்கான உலக தரம் வாய்ந்த ஏற்பாடுகளை செய்வது என பிரதமரிடம் உறுதி அளித்துள்ளதாக பூபேஷ் பாகல் தெரிவித்தார்.

MUST READ