பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகன் சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுல்தான் அர்பின் முன்பு இன்று காலை ஆஜரானார் ஆஜர்.

தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் முருகன். இவர் ஐ.ஜி.யாக பணியாறி ஓய்வு பெற்றார். இவர் கடந்த 2017-18-ம் ஆண்டில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஐ.ஜி.,யாக பணியாற்றினார்.
அப்போது அதே அலுவலகத்தில் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவருக்கு ஐ.ஜி முருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பெண் அதிகாரிக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாகவும், பின் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி காவல்துறையில் புகார் அளித்தார். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கை CBCID- க்கு மாற்றி உத்தரவிட்டது. பின்பு இந்த வழக்கானது சிபிசிஐடி போலீசாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. CBCID போலீசாரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அந்த வழக்கானது சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இதுவரை வழக்கு விசாரணைக்காக ஒருமுறை கூட ஓய்வு பெற்ற ஐ.ஜி முருகன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 22 ம் தேதி மதியம் நடந்த வழக்கு விசாரணையிலும் ஓய்வு பெற்ற ஐ.ஜி முருகன் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனால், 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுல்தான் அர்பின் வருகின்ற 02/01/2025 அன்று வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். மேலும், அன்றைய தேதியில் ஓய்வு பெற்ற ஐ.ஜி முருகன் நேரில் ஆஜராகவில்லை என்றால் அவரை போலீசார் கைது செய்து நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்தார்.
குறிப்பாக பிணையில் வர முடியாத பிடிவாரண்டில் கைது செய்து நேரில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் ஓய்வு பெற்ற ஐந்து முருகன் சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுல்தான் அர்பின் முன்பு இன்று காலை ஆஜரானார். தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து சட்ட ரீதியான நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐஜிக்கு எதிரான பிடிவாரண்ட் ரத்து.