Homeசெய்திகள்சென்னைஅரசியலுக்கு வந்தது ஏன்? தமிழிசை விளக்கம்

அரசியலுக்கு வந்தது ஏன்? தமிழிசை விளக்கம்

-

- Advertisement -

அரசியலுக்கு வந்தது ஏன்? தமிழிசை விளக்கம்

இன்று அம்பத்தூர் 82 வட்டத்தில் உள்ள அன்னை வைலட் கல்லூரியின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தமிழிசை

அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “கொரோனா, காய்ச்சல் அதிகரித்துக் கொண்டு இருப்பதால் எல்லோரும் முகக் கவசம் அணிந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தற்போது காய்ச்சல் மற்றும் கொரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மீண்டும் முககவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு பாதுகாப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும்.

we-r-hiring

மருத்துவர் என்றால் ஒரு சிலருக்கு தான் சிகிச்சை அளித்திருக்க முடியும். நான் அரசியலுக்கு வந்ததற்கு காரணம் சமுதாயத்தில் பலருக்கு சிகிச்சை அளிக்க தான் அரசியலுக்கு வந்தேன். ஆகவே படித்த இளைஞர்கள் அரசியல் வர வேண்டும். அரசியல் தூய்மையாக மாற வேண்டும்” என்றார்.

MUST READ