spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅப்போதுதான் அனைவருக்கும் 'கங்குவா' படத்தின் அருமை புரியும்.... நடிகர் நட்டி நட்ராஜ்!

அப்போதுதான் அனைவருக்கும் ‘கங்குவா’ படத்தின் அருமை புரியும்…. நடிகர் நட்டி நட்ராஜ்!

-

- Advertisement -

நடிகர் நட்டி நட்ராஜ் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான கங்குவா, பிரதர் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அடுத்தது சூர்யாவின் 45 வது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இவர் கங்குவா 2 படம் குறித்து பேசி உள்ளார்.அப்போதுதான் அனைவருக்கும் 'கங்குவா' படத்தின் அருமை புரியும்.... நடிகர் நட்டி நட்ராஜ்!

அதாவது கடந்த நவம்பர் 14ஆம் தேதி சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருந்தார். வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பாபி தியோல், மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் வில்லன்களாக நடித்திருந்தனர். மேலும் நடிகர் கார்த்தி இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. அப்போதுதான் அனைவருக்கும் 'கங்குவா' படத்தின் அருமை புரியும்.... நடிகர் நட்டி நட்ராஜ்!ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பலரும் இந்த படத்தை பார்த்து கடுமையாக விமர்சித்ததோடு மட்டுமல்லாமல் ட்ரோல் செய்தும் வந்தனர். இந்நிலையில் பிரபல நடிகர் நட்டி நடராஜ் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய போது, “கங்குவா படத்தின் முதல் பாகத்தை பார்த்துவிட்டு பலரும் விமர்சிக்கிறார்கள். ஆனால் இரண்டாம் பாகத்தை பார்த்தால் யாரும் அப்படி விமர்சிக்க மாட்டார்கள். இந்த படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். அப்போதுதான் அனைவருக்கும் கங்குவா படத்தின் அருமை புரியும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ