தொழில்நுட்ப குறைபாடுகளால் FIR கசிந்திருக்கலாம் என NIC விளக்கம் அளித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.
அதனை தொடர்ந்து, மாணவி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது முதல் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது வரை பல விஷயங்கள் நடந்துள்ளன.
இந்நிலையில், IPC-ல் இருந்து BNS சட்டத்திற்கு தரவுகளை மாற்றுவதில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகளால் FIR கசிந்திருக்கலாம் என தேசிய தகவலியல் மையம் (NIC) விளக்கம் அளித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தாக்குதல் வழக்கு FIR கசிந்த விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் அருண் முன்னதாக இதனை கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு பட்டாசு வெடிக்க தடை: காவல்துறை அறிவிப்பு