2024-25ம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் ஆண்டுவிழா நடத்திட 14.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை அறசானை வெளியிட்டுள்ளது.
2024-25ம் கல்வியாண்டில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி செயல்பாடுகள், மாணவர்களின் சிறப்பு அம்சங்கள், ஆசிரியரின் சிறப்பு செயல்பாடுகள், ஆகியவற்றை பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து பள்ளி ஆண்டுவிழா நடத்திட 14.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உயர்நிலை ,மேல்நிலைப் பள்ளிகளிலும், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை தொடக்க நடுநிலைப் பள்ளிகளிலும் பள்ளிகளின் வசதிக்கேற்ற பெற்றோர்கள்,பொது மக்களின் முன்னிலையில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் கொண்டு சிறப்பாக பள்ளி ஆண்டு விழா நடத்திட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்க உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு