- Advertisement -
ஒரு கிலோ எலுமிச்சை 80 ரூபாதான்! உடனே வாங்க!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுவதால் சங்கரன்கோவில் எலுமிச்சை மார்க்கெட்டில் கடந்த வாரம் 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை பழங்கள் 80 ரூபாய்க்கு விற்பனையாகின.

சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் விளையக்கூடிய எலுமிச்சை பழங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலமான கேரளாவிற்கும் அனுப்பப்படுகிறது.
தற்போது எலுமிச்சை பழங்களின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ள நிலைகள் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாகம் குறைந்துள்ளதால் எலுமிச்சை பழங்களின் விற்பனை சரிவை கண்டுள்ளது.
கடந்த வாரம் கிலோ 110 ரூபாய்க்கு விற்பனையான எலுமிச்சை பழங்கள் 30 ரூபாய் வரை குறைந்து கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.