spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெல்லூர் ராஜு புலிவாலை பிடித்துள்ளார்- சட்டப்பேரவையில் கலகல

செல்லூர் ராஜு புலிவாலை பிடித்துள்ளார்- சட்டப்பேரவையில் கலகல

-

- Advertisement -

மதுரையில் மாடு தான் பிடிப்பார்கள், ஆனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புலிவாலை பிடித்துள்ளதாக ஆகா ஓகோ என்று பாராட்டுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

வைரலான புலிவால் போஸ்ட்: ட்ரோலர்ஸ், ஹேட்டர்களுக்கு ரியாக்ட் செய்த செல்லூர்  ராஜு | former tn minister sellur raju reacts to tiger tail post towards  haters trollers - hindutamil.in

we-r-hiring

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுரையில் எந்த தொழிலும் இல்லாத நிலையில் மெட்ரோ ரயில் வந்து என்ன பயன் எனவும், தொழில்பேட்டை தொடங்கி, அமைச்சர்  ஆஹா ஓஹா எனப் பாராட்டும் வகையில் தொழில் தொடங்குங்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி வலியுறுத்தினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர், 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் செய்யாததை தற்போது செய்வீர்களா என கேள்வி எழுப்புவதாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை மக்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களே அண்ணனை பார்த்து ஆஹா ஓஹோ பாராட்டுவதாகவும், மதுரையில் மாடு தான் பிடிப்பார்கள் ஆனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புலிவாலை பிடித்து படம் வெளியிட்டுள்ளார், ஆனால் மதுரைக்காரர்கள் வீரத்த பார்த்தா, புலியின் வாய். பக்கம் இல்லாமல், வால் பக்கம் நின்று கொண்டு இருக்கிறார் என்று கூறியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

மேலும், தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக கூறிய அவர், மதுரையில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டைடல் பார்க் அமைக்க முதலமைச்சராக அறிவித்துள்ளதோடு, சிப்காட் தொழிற்சாலை வருவதற்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், தென் மாவட்டங்கள் என்று அனைத்து மாவட்டங்களிலும் சமச்சீரான தொழில் வளர்ச்சி  இருக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அதிகமான முதலீடுகள் தென் மாவட்டங்களை நோக்கி வர தொடங்கியுள்ளதால், மதுரையில் நிச்சயமாக புதிய தொழில் பேட்டைகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் தென்னரசு கூறினார்.

MUST READ