spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுக வழக்கு ஏப்.20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக வழக்கு ஏப்.20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

-

- Advertisement -

அதிமுக வழக்கு ஏப்.20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடர்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

ஓபிஎஸ்

அப்போது அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடக்கிறது, எங்கள் தரப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம், எனவே இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி, அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

we-r-hiring

கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு செய்தது குறிப்பிடதக்கது.

MUST READ