சென்னை மெரினாவில் பெண் பாணி பூரி சாப்பிடதால் திடீர் மரணம்!
சென்னை மெரினா கடற்கரையை சுற்றி பார்த்து விட்டு வேளச்சேரி பறக்கும் ரயிலில் திருவான்மியூருக்கு நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த இளம்பெண் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை மெரினா கடற்கரையை சுற்றி பார்ப்பதற்காக கடலுரை சேர்ந்த மோனிஷா(24). அவர் தனது நண்பர்களுடன் மெரினா கடற்கரையை சுற்றிப்பார்த்தார்.
பின்னர், இவர் அங்கிருந்த கடையில் பானிபூரி, சுண்டல், சோளம் ஆகியவற்றையும் வாங்கி சாப்பிட்டுள்ளர். மெரினாவை சுற்றி பார்த்து முடித்த பின்னர் சென்னை பீச் முதல் வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரயிலில் ஏறி திருவாண்மியூருக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார்.
ரயில் மயிலாப்பூர் நிலையம் அருகே வந்த போது திடீரென வாந்தி எடுத்து மோனிஷா அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன மோனிஷாவின் நண்பர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு மோனிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மோனிஷா இறந்து விட்டதாக கூறினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மோனிஷா மாரடைப்பு காரணமாக இறந்தாரா? இல்லை கடைகளில் விற்கப்படும் பானி பூரி, சோளம் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிடதால் இறந்தாரா? என்ற பல கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.