Homeசெய்திகள்கட்டுரை5 நாளாச்சு! தீவிரவாதிகள் எங்கே? தலையிடும் ஐ.நா. சபை! வெளிப்படையாக பேசும் உமாபதி!

5 நாளாச்சு! தீவிரவாதிகள் எங்கே? தலையிடும் ஐ.நா. சபை! வெளிப்படையாக பேசும் உமாபதி!

-

- Advertisement -

பெகல்காம் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 5 நாட்கள் ஆகியும் தாக்குதல் நடத்தியவர்களை  பிடிக்க முடியவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி வேதனை தெரிவித்துள்ளார்.

umapathi

காஷ்மீர் தாக்குதல் மற்றும் அதை தொடர்ந்து மோடி அரசு எடுத்துவரும் பதில் நடவடிக்கைகளை குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பெகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுடன் என்பது போன்று பிரதமர் மோடி தொடர்ச்சியாக பேசி வருகிறார். போர் வந்தால் நமக்கு எந்தவித பயனும் கிடையாது. நாம் சாலையில் வாகனத்தில் செல்கிறபோது, திடீரென ஒருவர் வாகனத்தின் மீது உரசிவிடுகிறார். அடுத்த நிமிடம் நாம் எதிர்வினை ஆற்றுகிறோம். உடனடியாக அடித்து விடுவார்கள். அல்லது பிரச்சினை செய்து விடுவார்கள். ஆனால் ஒரு மணி நேரம் ஆகிவிட்டால் அந்த பிரச்சினை நீர்த்து போகும். ஒரு நாள் ஆகிவிட்டால். மொத்தமாக அமைதியாகி விடும். இப்போது 5 நாட்கள் ஆகிவிட்டது. ஒருவரை தாக்க முடிவு செய்துவிட்டார்கள். தாக்குதலின் பின்னணியில் அவன்தான் உள்ளான் என்று உங்களுக்கு தெரியும் என சொல்கிறீர்கள். அப்போது அந்த எதிர்வினை எப்படி இருக்க வேண்டும்? எந்த நாட்டிலாவது இப்படி எதிர்வினை உள்ளதா? ஒரு அமெரிக்க வீரரை கொன்று விட்டால், அடுத்த நொடி என்ன ஆகி இருக்கும். ஹமாஸ் தாக்குதல் நடத்திய 8 மணி நேரத்தில் இஸ்ரேல் காசா மீது போர்  தொடுத்தது.

பஹல்காம் தாக்குதலை அறிந்த உடன் சவுதியில் இருந்து திரும்பிய மோடி, இந்தியாவில் இறங்கிய உடன்  ஒரு பில்டப்பை கொடுத்தார். அலுவலகம் கூட  செல்லாமல் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அடுத்து என்னவாகி உள்ளது என்று பாருங்கள். சிந்து நதியில் தண்ணீரை நிறுத்தப்போகிறோம் என்றால் இந்தியாவில் அணையே கிடையாது. சிந்து நதியில் தற்போதுள்ள இந்தியாவிற்குள் உள்ள அணையை மூடினால், பஞ்சாப் போன்ற பகுதிகளுக்கே தண்ணீர் வராது. தண்ணீரை நிறுத்திவிட்டதால் பாகிஸ்தான் உடனடியாக சரண்டர் ஆகிவிட்டது போல இங்குள்ளவர்கள் பேசுகிறார்கள். அதனால் பாகிஸ்தானில் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் முடங்கிவிட்டது போல நினைக்கிறார்கள். நான் எனது 16 வயதில் டெல்லியில் குடியரசு தலைவர் ஜெயில் சிங்கிடம் விருது வாங்கியவன்.

போர் என்று சொன்னால் இந்நேரம் துவம்சம் செய்திருக்க வேண்டும். தாக்குதலை நடத்திய ரெசிஸ்டண்ட்ஸ் பிரண்ட் அமைப்பு குறித்து பாகிஸ்தான் எப்படி திசை திருப்புவான் என்றால்? உருது அல்லது அரபு மொழியில் வைத்திருந்தால் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று முத்திரை குத்திவிடுவார்கள். அதனால் பாகிஸ்தான் ஏற்பாட்டில் சுதந்திர போராட்ட இயக்கம் போன்று போராடு, அதற்கு ஆங்கிலப் பெயரை வையுங்கள். அப்போது வெளிநாட்டில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் ஏதோ தாய் நாட்டிற்காக போராடுகிறார்கள் என்று நினைத்துக்கொள்வார்கள். இதை கூட இந்திய உளவுத்துறையால் கணிக்க முடியவில்லை என்றால் என்ன சொல்வது. இந்த ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் தொடங்கியது 2019ஆம் ஆண்டில் ஆகும். சட்டப்பிரிவு 370க்கு ஆதரவாக போராடுகிறார்கள் என்கிறபோதே இது தீவிரவாதமாக மாறும் என்று தெரியாமல் அவர்களை 5 ஆண்டுகள் செயல்பட விட்டுள்ளனர். இந்த இயக்கத்தை 2023ஆம் ஆண்டில் தான் தடை செய்கிறார்கள். உள்ளுர் தீவிரவாதியை பிடிக்க முடியவில்லை. நேற்று மற்றொரு கோமாளித்தனத்தை நடத்துகிறார்கள்.  தீவிரவாதிகளின் வீடுகளை குண்டுவைத்து தகர்க்கிறார்கள்.

தீவிரவாதிகளை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும். அவர்கள் மனித இன விரோதிகள். அப்படி இருக்கிறபோது ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னும் தாக்குதல் நடத்தவில்லை. இந்த தாக்குதலுக்கு தங்களுக்கு பொறுப்பே இல்லை என்று பாகிஸ்தான் சொல்கிறது. அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். பாகிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் சிகிச்சைக்காக வந்துள்ளார்கள். மருத்துவமனைகளில் உள்ளவர்களை அடித்து விரட்டுகிறார்கள். எதிரி நாடு என்றால் எதற்காக அவர்களை சிகிச்சைக்காக விடவேக் கூடாது. பாதி சிகிச்சையில் உள்ளவர்களை உடனே போக வேண்டும் என்றால் என்ன செய்வார்கள்? இதனால் தீவிரவாதம் குறைந்துவிடுமா? நீங்கள் தீவிரவாதிகளில் 6 பேரில் ஒருவரையாவது பிடித்திருக்க வேண்டும். பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி இருக்க வேண்டும். அல்லது தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்க வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட 6 பேரையும் தேடி பிடித்து 24 மணி நேரத்திற்குள்ளாக கொன்றிருக்க வேண்டும்.

இன்றைக்கு பாகிஸ்தான் துணை பிரதமர் சொல்கிறார், ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் அமைப்பினர் விடுதலைப் போராளிகள். அவர்கள் தனி நாடு கேட்டு போராடுகிறார்கள். அவர்கள் தாக்குதல் நடத்தி இருக்கலாம். எப்படி பாகிஸ்தானை சொல்லலாம் என்று சொல்கிறார். இதுபோன்ற பல வதந்திகளை பரப்புகிறார்கள். அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக இல்லை. அதிபர் டிரம்ப் என்ன சொல்கிறார் என்றால், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார். மற்றொன்றையும் சொல்லியுள்ளார். தீவிரவாதிகளை ஒழிக்க இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று சொல்லியுள்ளார். இன்றைக்கு  5 நாட்கள் ஆகியும் தாக்குதல் நடத்தவில்லை. இனி எப்போது திட்டம் போட்டு தாக்குதல் நடத்தப் போகிறார்கள்.

பாகிஸ்தான் தரப்பில் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறார்கள். பாகிஸ்தான் வான்பரப்பை பயன்படுத்த தடை விதித்துள்ளார்கள். இதனால் விமான எரிபொருள் செலவு அதிகரிக்கும். அதற்காக பாகிஸ்தானை விட்டுவிடக் கூடாது. அவர்களுக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும். தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும். அதை விடுத்து அரசியல் செய்வதோ, நோயாளிகளை அடித்து விரட்டுவதோ செய்யக்கூடாது. காங்கிரஸ் அரசு தான் பலவீனமான அரசு. நாங்கள் வந்தால் பாதுகாப்பாக இருப்போம் என்று பாஜக சொன்னார்கள். இன்றைக்கு நடைபெறும் தாக்குதல்களுக்கும் இந்திராகாந்தி, நேருதான் காரணம் என்று சொல்வார்கள். பலரும் தங்களின் இன்னுயிரை நீத்து இந்த நாட்டை பாதுகாப்பதற்காக தயாராக இருக்கக்கூடி நிலையில், இதை வைத்து அரசியல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ