spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபஹல்காம் விவகாரத்தில் விஜய் தேவரகொண்டாவின் சர்ச்சை பேச்சு.... புகாரளித்த பழங்குடியினர்கள்!

பஹல்காம் விவகாரத்தில் விஜய் தேவரகொண்டாவின் சர்ச்சை பேச்சு…. புகாரளித்த பழங்குடியினர்கள்!

-

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா தற்போது கிங்டம் எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார்.பஹல்காம் விவகாரத்தில் விஜய் தேவரகொண்டாவின் சர்ச்சை பேச்சு.... புகாரளித்த பழங்குடியினர்கள்! இந்த படம் வருகின்ற மே 30ஆம் தேதி கிடைக்க கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நேற்று (மே 1) திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் அறிமுக விழா சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூர்யா, சிவகுமார் ஆகியோருடன் இணைந்து விஜய் தேவரகொண்டாவும் கலந்து கொண்டார். அந்த விழாவில் பேசிய விஜய் தேவரகொண்டா, பஹல்காமில் நடந்த தாக்குதல் 500 வருடங்களுக்கு முன்பு பழங்குடியின சமூகத்தினர்கள் மோதிக்கொண்ட சம்பவங்களைப் போல் இருக்கிறது என்று பேசினார். இவருடைய இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே பழங்குடியின மக்களை இழிவுபடுத்தியதற்காக, பழங்குடியின மக்களிடம் விஜய் தேவரகொண்டா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தெலுங்கானா பழங்குடியின அமைப்பினர் கூறி இருப்பதோடு கடும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.பஹல்காம் விவகாரத்தில் விஜய் தேவரகொண்டாவின் சர்ச்சை பேச்சு.... புகாரளித்த பழங்குடியினர்கள்! அதுமட்டுமில்லாமல் ஐதராபாத்தை சேர்ந்த லால் சௌக்கான் என்பவர், எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு எதிராக புகார் அளித்துள்ளார். பழங்குடியின அமைப்பினர்களும் விஜய் தேவரகொண்டா மீது புகார் அளித்து வருகின்றனர். எனவே இது சம்பந்தமாக கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

MUST READ