Homeசெய்திகள்க்ரைம்தி இந்து வெளியிட்ட ஆதாரம்! விக்ரம் மிஸ்ரி பகீர் வாக்குமூலம்!

தி இந்து வெளியிட்ட ஆதாரம்! விக்ரம் மிஸ்ரி பகீர் வாக்குமூலம்!

-

- Advertisement -

ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்ப அங்குள்ள மக்களின் நம்பிக்கையை பெறுவதுதான் ஒரே வழி என்றும், அதற்கான நடவடிக்கைகள மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தோழர் மருதையன் தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து தோழர் மருதையன் யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடங்கும்போது அது குறித்து பாகிஸ்தான் ராணுவத்திற்கு தகவல் அளித்து விட்டுதான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சொன்னார். இதனை தொடர்ந்து விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். தீவிரவாத முகாம்களை தாக்குவதாக இருந்தால் முன்கூடியே தகவல் அளித்துவிட்டுதான் தாக்குவீர்களா? இது ஆள்காட்டி வேலையாக உள்ளதாக குற்றம்சாட்டி இருந்தார். அந்த விமர்சனத்திற்கு, வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் விக்ரம் மிஸ்ரி 2 மணி நேரம் விளக்கம் அளித்துள்ளார். அப்போது முதல் ஏவுகணையை அடித்துவிட்டு தான் பாகிஸ்தானிடம் சொன்னோம் என்று சொல்கிறார். தாக்குதல் நடத்தும் முன் சொல்வதற்கும், நடத்திய பின்னர் சொல்வதற்கும் இடையே எவ்வளவு கால இடைவெளி இருக்கும். பகல்காம் தாக்குதலில் இருந்த பாதுகாப்பு தோல்விகள் குறித்து கடும் விமர்சனம் எழுந்தது. தாக்குதலில் உயிரிழந்த கடற்படை வீரர் ஒன்றரை மணி நேரம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்திருந்தால் கூட காப்பாற்றி இருக்கலாம் என்று அவருடைய சகோதரி சொல்லியிருந்தார். அதை சமாளிக்க உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் விரட்டி அடிப்பேன் என்று பிரதமர் மோடி சொல்கிறார். அவரது வெளியுறவு அமைச்சர் நாங்கள் இதை மட்டும் தான் அடிப்போம் நீங்கள் விலகிக்கொள்ளுங்கள் என்று இவர் சொல்கிறார். இது ஒரு மேட்ச் பிக்சிங் ஆகும்.

இந்தியா தாக்குதல் நடத்தியதை தெரிவித்ததால், உடனே அவர்கள் உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் தெரிவித்திருப்பார்கள்.  இந்தியா எங்கள் மீது ஆக்கிரமிப்பு தாக்குதல் நடத்தியுள்ளது. நாங்கள் அதற்கு தற்காப்பு தாக்குதல் நடத்துகிறோம் என்று சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். இன்றைய போர்களில் விமானப்படையை கொண்டு தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக பாகிஸ்தானில் உள்ள ரேடார்களை செயல் இழக்க செய்ய வேண்டும். தகவல் தெரிவித்துவிட்டதால் இந்திய விமானப்படையின் ஒட்டுமொத்த பலவீனத்தையும் வெளிப்படுத்தி விட்டோம் என்று பிரவீன் சாமி என்கிற பாதுகாப்புத்துறை வல்லுநர் தெரிவித்துள்ளார். ராணுவத்துறை வல்லுநரான பிரவீன் சுவாமி என்பவர் பிரிண்ட் டாட் இன் இணையதளத்தில் பிரான்சை சேர்ந்த ஆய்வாளர் ஃபேப்ரிஸ் உல்ப் என்பவரை மேற்கோள் காட்டி கட்டுரை எழுதியுள்ளளார். அதில், தீவிரவாத இலக்குகளை மட்டும்தான் தாக்க போகிறோம் என்று இந்தியா எச்சரித்ததன் காரணமாக பாகிஸ்தான் விமானப்படை தன்னுடைய நீண்ட தொலைவு செல்லக்கூடிய ஏவுகணைகளை வைத்து, இந்திய எல்லைக்குள் இருந்த இந்திய போர் விமானங்களை தாக்கியதாக சொல்கிறார். இதன் காரணமாக 5 இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் தாக்கி அழித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதைதான் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு; முதலமைச்சர் தேர்வில் பெரும் குழப்பம்

இந்திய ஊடகங்களை உலக நாடுகள் முழுவதும் கடுமையாக விமர்சிக்கிறது. கராச்சி  எரிகிறது. இஸ்லாமாபாத் தரை மட்டமாகிவிட்டது. பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்து விட்டது என்று சொன்னார்கள். இதில் எதாவது ஒன்று நடந்துள்ளதா? பாகிஸ்தான் மோடியின் காலில் விழுந்ததால் அவர் போரை நிறுத்தினார் சரி. பகல்காமில் தாக்குதல் நடத்தியவர்களை ஒப்படைத்தால்தான் போரை நிறுத்துவேன் என்று சொல்ல வேண்டியதுதானே. அப்படி கேட்டீர்களா? கேட்கவில்லை என்பதற்கு என்ன பதில் என்றால்? ஜெய்சங்கர் சொன்னதுதான். உங்கள் நோக்கம் பகல்காம் தீவிரவாதிகளை தண்டிப்பது நோக்கம் இல்லை. போரை நான் தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் 7 முறை சொல்லிவிட்டார். ஆனால் நீங்கள் அமெரிக்க தூதரை அழைத்து இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் 3வது நாட்டின் தலையீட்டை விரும்பவில்லை என்று சொல்லி உள்ளீர்களா? பாகிஸ்தான் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று எச்சரிக்கைவில்லை என்று விக்ரம் மிஸ்ரி சொல்கிறார். ஆனால் பிரதமர் மோடி அணு  ஆயுதங்களை கண்டு பயப்பட மாட்டோம் என்று சொல்கிறார். இதில் யார் சொல்வது உண்மை?

இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. அப்போது உலகின் மிகவும் ஆபத்தான பகுதி இதுதான் என்று அறிவித்தார். பாகிஸ்தானில் ராணுவ ஜெனரல் முனிர் ஒரு ஜிஹாதி என்று எல்லோருக்கும் தெரியும். பகல்காம் தீவிரவாத தாக்குதலை, தீவிரவாதிகளை தண்டிப்பதற்காக அல்ல தன்னுடைய அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகிறார். அதற்கு வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் சசிதருர் ஆதரவாக செயல்படுகிறார். புல்வாமா தாக்குதலில் உளவுத்துறையின் தோல்வி குறித்து விசாரித்த என்.ஐ.ஏ இன்று வரை முடிவு சொல்லியுள்ளதா? பிரண்ட்லைன் நாளிதழில் கட்டுரை வந்துள்ளது 11 உளவுத் தகவல்கள் உள்ளன. அதை வைத்து அவர் 2019 தேர்தலில் அவர் வெற்றி பெற்றுவிட்டார். தற்போது பகல்காம் தாக்குதல் குறித்து என்டிடிவியில் வெளியான செய்தியில் சரியாக ஒருவாரத்திற்கு முன்னதாக தீவிரவாதிகள் ஒத்திகை பார்த்துள்ளனர் என்கின்றனர். இந்த உளவு தோல்விக்கு என்ன விளக்கம் உள்ளது. அமித்ஷா சொல்கிறார், சுற்றுலா பயணிகள் அனுமதி பெறாமல் போய்விட்டதாக சொல்கிறார்.

2019ல் காஷ்மீரில் ஜம்மு – காஷ்மீரை உடைத்தபோது இவர்கள் ஒரு வேலை செய்கிறார்கள். சட்டப்பிரிவு 370ன் கீழ் ஜம்மு காஷ்மீர் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர். இந்த காவல்துறை அதிகாரிகளை எல்லாம் அவர்கள் வடகிழக்கு மாநிலங்களில் போட்டு விட்டனர். ஏன் என்றால் காஷ்மீரிகள் மீது நம்பிக்கை இல்லை. இப்படி செய்ததன் காரணமாக உள்ளூர் உளவுத் தகவல்கள் தோல்வி அடைந்துவிட்டன. தீவிரவாதிகள் எல்லைத்தாண்டி வராமல் தடுப்பது ராணுவத்தின் பொறுப்பு. காஷ்மீருக்குள் உள்ள நகரங்கள் சிஆர்பிஎப் கட்டுப்பாட்டில் உள்ளது. உள்ளுர் உளவு தகவல்கள் லோக்கல் காவல்துறையின் பொறுப்பாகும். ஆனால் இவர்களுக்கு காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லை. இதன் விளைவாக உளவுத்தகவல் தோல்வி அடைந்துவிட்டது. காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை பெறுவதுதான் இதற்கு ஒரே தீர்வு என்று முன்னாள் உளவுத்துறை அதிகாரி சொல்கிறார். ஆனால் இந்த கேள்விகள் எதற்கும் பதில் இல்லை.

7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு

ஹரியானாவை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் போர் குறித்து எழுதிய பேராசிரியரை தேச துரோக வழக்கில் கைது செய்துள்ளனர். ஆனால் மத்திய பிரதேசத்தில் பெண் ராணுவ அதிகாரி குறித்து பேசிய பாஜக அமைச்சர் மீது எந்த நடவக்கையும் எடுக்கப்படவில்லை. நாட்டு பற்று என்பதை வைத்துக்கொண்டு என்ன நாடகம் நடத்துகிறீர்கள். அந்த நாடகத்தை அம்பலப்படுத்தி பேசுவதற்கு துணிவற்ற நிலையில் எதிர்க்கட்சிகள் உள்ளன. ராகுல்காந்தி ஒருவர் மட்டும் எதிர்க்கிறார். சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத், இந்தியா கூட்டணி மத்திய அரசின் குழுவில் பங்கேற்க கூடாது என்று சொன்னார். அதற்கு சரத் பவார் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.  நாட்டு நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. அதை கேள்வி கேட்காமல், கேட்பவர்களை வாயை மூட சொல்கிறார். எதிர்க்கட்சிகள் ஆகட்டும், பாஜகவினர் ஆகட்டும் இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ