தொகுதி மறுவரையில் தமிழ்நாட்டின் பிரதிநித்துவம் குறைந்தால் அதிமுக எதிர்க்கும் எனவும் தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என எடப்பாடி பழனிச்சிாமி தெரிவித்துள்ளாா்.
தொகுதி மறசீரமைப்பில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளாா். தனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என விளக்கமளித்துள்ள அவர், தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பு குறித்து தெளிவான மனநிலையில் மக்கள் உள்ளனர் என்று தெரிவித்துள்ளாா், தமிழ்நாட்டில் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையது தான் என்றாா். ஆளுங்கட்சியின் அவலங்களை மடைமாற்றும் அரசியலை நிறுத்திவிட்டு மக்கள் நலனில் அக்கறை காட்டுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளாா்.
வருகின்ற 19 ஆம் தேதி தேர்தல்! மக்கள்நீதிமய்யம் தலைவர் வேட்பு மனு தாக்கல்!