ஓ பி சி அணி மாநில நிர்வாகியும் ரவுடியுமான என அழைக்கப்படும் மிளகாய் பொடி வெங்கடேசன் சென்னை செங்குன்றத்தில் நேற்று கைது செய்யப்பட்டாா்.பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஓ பி சி அணி மாநில நிர்வாகியும் ரவுடியுமான மிளகாய் பொடி வெங்கடேசன் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பாஜகவிலிருந்து நீக்கியதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், அவா் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்த திரு.K.R.வெங்கடேசன் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” என்று கூறினாா்.