நடிகர் ஜெயம் ரவியின் 22 வருட திரை பயணத்தை வாழ்த்தும் விதமாக கராத்தே பாபு படப்பிடிப்பு தளத்தில் ரவி மோகன் என்கிற ஜெயம் ரவிக்கு பூங்கொத்து கொடுத்து, கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.ராஜா இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர். இப்படம் பெரும் வெற்றியை பெற்று, ரசிகா்கள் மத்தியிலும், மக்களின் மனதிலும் இன்றளவும் நீங்கா இடம் பெற்று வருகிறது. இதன் மூலம் இவாின் ரவி மோகன் என்ற பெயா் மறைந்து ஜெயம் ரவி என்றே மாறியது. பல வித்தியாசமான கதைகளத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தையும் பிடித்துள்ள ரவி மோகன் ஜூன் 20 உடன் சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
தற்பொழுது டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் அரசியல் பின்னணியில் கராத்தே பாபு என்ற தலைப்பில் புதிய படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து அவர் ரவிமோகன் ஸ்டுடியோஸ் என்ற தனது புதிய தயாரிப்பு நிறுவனம் மூலம் டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி படங்களை இயக்கிய கார்த்திக் யோகியின் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இவருடைய மிகப்பெரிய அளவில் தயாராகி உள்ள ஜீனி திரைப்படமும் திரைக்கு வர தயாராகி வருகிறது.
இந்நிலையில் 22 வருட திரை பயணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக திரை பிரபலங்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அவர் நடித்து வரும் கராத்தே பாபு படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் கணேஷ் கே பாபு உள்ளிட்ட படக்குழுவினர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து திரை பயணத்திற்கு கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளனர். அரசியல் கதைகளத்தில் தயாராகி வரும் இப்படத்தின் கிளிம்ஸ் ஏற்கெனவே ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் படத்திற்கு எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -