spot_imgspot_img
Homeதிருக்குறள்107 - இரவச்சம், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

107 – இரவச்சம், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

107 இரவச்சம் கலைஞர் குறல் விளக்கம்   திருக்குறள்

1061. கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
          இரவாமை கோடி உறும்

கலைஞர் குறல் விளக்கம்இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச் சிந்தையுடையவரிடம் கூட. இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்.

we-r-hiring

1062. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
          கெடுக உலகியற்றி யான்

கலைஞர் குறல் விளக்கம்பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.

1063. இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
          வன்மையின் வன்பாட்ட தில்

கலைஞர் குறல் விளக்கம்வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப்போல் வேறொரு கொடுமை இல்லை.

1064. இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
          காலும் இரவொல்லாச் சால்பு

கலைஞர் குறல் விளக்கம்வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது.

1065. தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த
          துண்ணலின் ஊங்கினிய தில்

கலைஞர் குறல் விளக்கம்கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

1066. ஆலிற்கு நீரென் நிரப்பினும் நாவிற்
          கிரவின் இளிவந்த தில்

கலைஞர் குறல் விளக்கம்தாகம் கொண்டு தவிக்கும் ஒரு பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக்கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை.

1067. இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பிற்
          கரப்பார் இரவன்மின் என்று

கலைஞர் குறல் விளக்கம்கையில் உள்ளதை மறைத்து ‘இல்லை’ என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களை யெல்லாம் கையேந்திக் கேட்டுக் கொள்கிறேன்.

1068. இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
          பார்தாக்கப் பக்கு விடும்

கலைஞர் குறல் விளக்கம்இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது, இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து நொறுங்கிவிடும்.

1069. இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
          உள்ளதூஉம் இன்றிக் கெடும்

கலைஞர் குறல் விளக்கம்இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது. இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது.

1070. கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
          சொல்லாடப் போஒம் உயிர்

கலைஞர் குறல் விளக்கம்இருப்பதை ஒளித்துக்கொண்டு ‘இல்லை என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ?

MUST READ