spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகை சரோஜா தேவிக்கு இறுதி மறியாதை… நாளை சென்னபட்டணாவுக்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது

நடிகை சரோஜா தேவிக்கு இறுதி மறியாதை… நாளை சென்னபட்டணாவுக்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது

-

- Advertisement -

தமிழ், தெலுங்கு, இந்தி,கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை சரோஜா தேவி காலமானார். இவருக்கு திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை காலை அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.நடிகை சரோஜா தேவிக்கு இறுதி மறியாதை… நாளை சென்னபட்டணாவுக்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறதுதமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். அவருக்கு வயது 87. நடிகை சரோஜா தேவி, கடந்த 1938 ஆம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி பிறந்தார். 17 வயதிலேயே திரைப்படத் துறையில் அறிமுகமான இவர், தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக மாறினார். 1955 ஆம் ஆண்டு மகாகவி காளிதாசா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த சரோஜா தேவிக்கு அபிநய சரஸ்வதி என்ற பட்டமும் உண்டு. இவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய அரசிடமிருந்து வாழ்நாள் சாதனையாளர் விருதும், 1969 இல் பத்மஸ்ரீ விருதும், 1992 இல் பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது.

சரோஜா தேவியின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது வீட்டின் முன் காவல்துறையினர் தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சரோஜா தேவியின் மரணம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரின் மறைவு திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. நான்கு மொழில்களில் பிரபலமான நடிகை என்பதால் அவரது உடலுக்கு கர்நாடகா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு செல்கின்றனர்.

we-r-hiring

மறைந்த சரோஜாதேவியின் உடலுக்கு கன்னட திரை உலகத்தை சேர்ந்த சிவராஜ் குமார் மற்றும் திரையுலகினர் செலுத்தி வருகின்றனர் மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்,சத்யராஜ்,வடிவேலு,வைரமுத்து உள்ளிட்ட துறை பிரபலங்களும் தங்களது இரங்கல் செய்தி தெரிவித்து வருகின்றனர். இன்று மாலைகுள்ளாக கன்னடம் முதலமைச்சர் சித்ராமையா சரோஜாதேவி இல்லத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து சரோஜாதேவியின் மகன் கௌதம் கூறுகையில், நாளை காலை 11:30 மணி வரை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பின்னர், உடல் சென்னபட்டணாவுக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு, தசாவரத்தில் உள்ள கன்வா அணை அருகே வொக்கலிகா பாரம்பரியத்தின்படி இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்றார்.

ஒரே வாரத்தில் இரண்டு துணை ஆணையர்கள் பொறுப்பிலிருந்து விடுவிப்பு..சென்னை காவல் ஆணையர் அதிரடி

MUST READ