அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை அள்ளி வருகிறது. இது தவிர லோகேஷ் கைதி 2, விக்ரம் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர், ரஜினி – கமல் நடிப்பில் புதிய கேங்ஸ்டர் படத்தை இயக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்த படங்களை தயாரித்து வரும் லோகேஷ் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது. அதன்படி லோகேஷ் ஹீரோவாக நடிக்க இருக்கும் புதிய படத்தை ‘கேப்டன் மில்லர்’ படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கப் போகிறார் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 செப்டம்பர் அல்லது அக்டோபரில் தொடங்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.