நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல இயக்குனருடன் இணைந்து நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பெயரையும் புகழையும் பெற்றுள்ளார். இது தவிர இவர் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் உருவாகியிருந்த ‘உப்பு கப்புரம்பு’ எனும் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இவரது ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. மேலும் திருமணத்திற்கு பின்னர் இன்னும் சில படங்களில் கமிட்டாகி வரும் கீர்த்தி சுரேஷ், பிரபல இயக்குனர் மிஸ்கினுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். இந்த படமானது பெண்களை மையமாக கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனர் யார்? என்பது போன்ற தகவல்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

இயக்குனர் மிஸ்கின் சமீப காலமாக நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
எனவே கீர்த்தி சுரேஷின் புதிய படத்தில் மிஸ்கினின் கதாபாத்திரம் எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.