சியான் விக்ரமின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சியான் என்று ஏராளமான ரசிகர்களால் கொண்டாடப்படும் விக்ரம் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தனது 63வது படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை. இது தவிர இவர், ‘மெய்யழகன்’ பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிக்க போவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் பிரேம்குமார் தற்போது ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் ‘ராட்சசன்’ படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இதற்கிடையில் இவர், ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக சொல்லப்பட்டது. அதன்படி ‘வீர தீர சூரன்’ படத்திற்கு பிறகு விக்ரமின் அடுத்த படம், ராம்குமார் பாலகிருஷ்ணனின் படமாக தான் இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் ராம்குமார் பாலகிருஷ்ணன், சிம்பு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி பின்னர் அந்த படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சிம்புவும், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஆகையினால் ராம்குமார் பாலகிருஷ்ணன் அடுத்தது சியான் விக்ரமை தான் இயக்குவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இனிவரும் நாட்களில் இந்த படம் தொடர்பான மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.