சூர்யா 48 படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யாவிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் சமீப காலமாக இவருடைய படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. எனவே அடுத்ததாக ரசிகர்கள் பலரும் சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படமானது அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சூர்யா, வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனது 46வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்தது ‘ஆவேஷம்’ படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் 47வது படத்தில் நடிக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் சூர்யாவின் 48வது படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது சூர்யா 48 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்தை பா.ரஞ்சித் இயக்க வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபடுகிறது. மேலும் இந்த படத்தை சூர்யாவே தயாரிக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

பா. ரஞ்சித் தற்போது ‘வேட்டுவம்’ படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்த பின்னர் சூர்யாவை இயக்குவார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.