spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27ல் உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு..!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27ல் உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு..!

-

- Advertisement -
உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வையொட்டி வருகிற 27ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில், கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு வருகிற அக்டோபர் 22ம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக்.27ம் தேதியும், திருக்கல்யாணம் அக்.28ம் தேதியும் நடைபெறவுள்ளது. திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி, அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்

we-r-hiring

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், “தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு 27.10. 2025, திங்கட்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணிகள்/ பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலவாணி முறிச் சட்டத்தின் படி பொது விடுமுறை நாளல்ல என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக 08.11.2025 இரண்டாவது சனிக்கிழமை என்று அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ