spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுரூ.1.5 கோடி மோசடி செய்துவிட்டு பாலியல் புகார்.. இன்ஸ்டா பிரபலம் மீது ஈவிபி பிலிம் சிட்டி...

ரூ.1.5 கோடி மோசடி செய்துவிட்டு பாலியல் புகார்.. இன்ஸ்டா பிரபலம் மீது ஈவிபி பிலிம் சிட்டி ஓனர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

-

- Advertisement -

ரூ.1.5 கோடி மோசடி செய்துவிட்டு பாலியல் புகார்.. இன்ஸ்டா பிரபலம் மீது ஈவிபி பிலிம் சிட்டி ஓனர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

இன்ஸ்டா பிரபலமும் , பிரபல ஆடை வடிவமைப்பாளரான பார்வதி மீது ஈவிபி பிலில் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி மோசடி புகார் அளித்துள்ளார்.

we-r-hiring

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அருகே செம்பரம்பாக்கம் பகுதியில் ஈவிபி பிலிம் சிட்டி அமைந்துள்ளது. பிக்பாஸ் உள்ளிட்ட பல சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா படப்பிடிப்புகள் இந்த ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருகின்றன. படப்பிடிப்புகளுக்கு பிலிம் சிட்டியை வாடகைக்கு கொடுத்து, முக்கிய தொழிலதிபராக வலம் வருபவர் சந்தோஷ் ரெட்டி. இவர் மீது அண்மையில் ஆடை வடிவமைப்பாளரும், இன்ஸ்டா பிரபலமுமான பார்வதி பெங்களூரு வயாலி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதில், அதில் தன்னை காதலிக்க வில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என சந்தோஷ் ரெட்டி கொலை மிரட்டல் விடுத்தாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஆடை வடிவமைப்பாளர் பார்வதி மீது, ஈவிபி ப்லிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் அளித்த புகார் குறித்து விளக்கமளித்தார். அவர் கூறியதாவது : “ஆடை வடிவமைப்பாளர் பார்வதி என்பவரை தனக்கு 4 வருடங்களாக தெரியும். நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமான அவர் அதன்பின்னர் நட்பாக பழகி வந்தார். நாளடைவில் தன் விட்டு சுப நிகழ்ச்சிகளுக்கும் நகைகள் மற்றும் ஆடைகளை குறைந்த விலைக்கும், புதிய டிசைன்களாகவும் வாங்கித் தருவதாக கூறினார். அதுபோல தான் என்னிடமும் பணத்தை பெற்றுக்கொண்டு, பின்னர் பணத்தையும் திரும்பத்தரமால், பொருட்களையும் திரும்பத்தராமல் இருந்து வந்தார். இதுதொடர்பாக நான் காவல்நிலையத்தில் புகார் அளித்த பின்னர் அவர் உடனே சென்று பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் என்மீது புகார் அளித்துள்ளார். அதன்பின்னரே இவர்களின் தொழிலே மோசடி செய்வதுதான் என்பது எனக்கு தெரியவந்தது.

ரூ.1.5 கோடி மோசடி செய்துவிட்டு பாலியல் புகார்.. இன்ஸ்டா பிரபலம் மீது ஈவிபி பிலிம் சிட்டி ஓனர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

அதாவது பொருட்களை வாங்குவதற்காக பார்வதியின் கணவர் பார்த்திபன் நடத்தி வரும் பிரைம் எண்டர்பிரைசஸ் சன்கிற நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் ரூ. 3 கோடியே 6 லட்சத்தை டெப்பாசிட் செய்தேன். ஆனால் அடுத்தநாளே வரிப்பிரச்சனை வரும் எனக்கூறி அந்த பணத்தை எனக்கு திருப்பி அனுப்பி விட்டனர். பின்னர் பொருட்களை வாங்க பெங்களூருவுக்கு என்னை நேரில் வரவழைத்தார்கள். அங்குள்ள பிரபல கடைகளுக்குச் சென்று வைரம் பதித்த வாட்ச் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை வாங்கினோம். அங்கு ஒவ்வொரு பொருட்களுக்கும் பார்வதி சொன்ன வங்கிக்கணக்குகளில் சுமார் ரூ. 1.5 கோடிக்கு பணம் அனுப்பி வைத்தேன்.

ஆனால் அதில் சில பொருட்கள் மட்டுமே கையில் கொடுக்கப்பட்ட நிலையில், மற்ற பொருட்கள் ஆர்டரின் பேரில் சென்னைக்கு அனுப்பிவைக்கப்படும் எனக்கூறி என்னையும் அனுப்பி வைத்தனர். ஆனால் 20 நாட்கள் கழித்து பொருட்கள் இன்னும் வரவில்லையே எனக் கேட்க பார்வதியை தொடர்பு கொண்டபோது அவர் , அவர் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. பின்னர் வாட்ஸ் அப் கால் மூலம் அழைத்து கேட்டபோது, என்னிடமா பணம் கொடுத்தீர்கள்?? எங்கு பணம் கொடுத்தீர்களோ அங்கு சென்று வாங்கிக்கொள்ளுங்கள் என அலட்சியமாக பதிலளித்தார்.

ரூ.1.5 கோடி மோசடி செய்துவிட்டு பாலியல் புகார்.. இன்ஸ்டா பிரபலம் மீது ஈவிபி பிலிம் சிட்டி ஓனர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

அவர்கள் என்மீது புகார் அளித்த தேதிக்கு பின்னர்தான் நான் அவருக்கு பணத்தை வங்கிக் கணக்கில் அனுப்பினேன். நான் ஆர்டர் செய்த பொருட்கள் அனைத்திற்கும் அந்தந்த நிறுவனங்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தினேன். அதன்பின்னர் பொருட்கள் அனைத்தும் பார்வதி வீட்டிற்கு வந்தது. அந்த தகவலை எனக்கு தெரிவித்து ஓட்டுநருடன் காரை அனுப்பி எடுத்துக்கொள்ளுமாறு சொன்னவர்கள் அதன்பின்னர் மோசடி செய்துவிட்டனர். இதுதொடர்பாக நசரத் பேட்டை காவல் நிலையத்தில் 34 லட்ச ரூபாய் மோசடிக்கான புகார் கொடுத்து அதற்கு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்து, 1 கோடியே 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததற்கான புகாரை அளித்துள்ளேன். எங்களைப்போன்ற பல தொழிலதிபர்களை குறி வைத்து மோசடி செய்து வந்துள்ளனர். இதேபோன்று மேலும் அவர்கள் மீது புகார் கொடுக்க பலர் வெளி வருவார்கள். குரோம்பேட்டை முகவரியை கொடுத்துவிட்டு பெங்களூரில் இருப்பார்கள். அதுபோன்றுதான் என்னிடம் மோசடி செய்தார்கள். என்னிடம் எந்த விசாரணையும் செய்யாமல் பெங்களூரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். என்னிடம் இருந்து மொத்தம் ஒரு கோடியே 38 லட்சம் மோசடி செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பிலிம் சிட்டி வைத்திருப்பதால் எங்கள் பெயரைக் கெடுத்தால் பணத்தை திரும்ப கேட்காமல் பின் வாங்கிவிடுவோம் என்று நினைக்கிறார்கள். பலருக்கு பரிசுகள் கொடுத்து மறைமுகமாக செல்வாக்கை பயன்படுத்துகிறார்கள். அப்படி தான் என்மீது பாலியல் சீண்டல் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்” என்று தெரிவித்தார்.

MUST READ