விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே காந்தி டாக்ஸ், ட்ரெயின் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதி, பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். இதற்கிடையில் இவர், பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார்.
பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இப்படத்தில் தபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய அளவில் இப்படம் தயாராகி வருகிறது. அதன்படி ஏற்கனவே படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
And that’s a wrap for #PuriSethupathi 🎬
After months of an intense, emotional, and joyful journey on the sets, the team has completed the entire shooting process 💥
Get ready for some truly exciting updates soon ❤️🔥
A #PuriJagannadh film 🎬@Charmmeofficial Presents 🎥… pic.twitter.com/HAvLjhTNfX
— Puri Connects (@PuriConnects) November 24, 2025

அந்த வீடியோவில் இந்தப் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த அப்டேட் ஒத்திவைக்கப்பட்டது. எனவே ரசிகர்கள் அடுத்தது இந்த படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக், டீசர் போன்ற அப்டேட்டுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


