தமிழ் நாட்டில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் நண்பகல் 1 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூா் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் – மெட்ரோ ரயில் நிர்வாகம்



