- Advertisement -
அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் வார் ரூமில் தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பொது மக்கள், பிரபலங்கள், தலைவா்கள் உள்ளிட்டோரும் காலை முதலே கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனா்.
மேலும், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலையிலேயே தனது வாக்கினை பதிவுசெய்தாா். அதுமட்டுமல்லாமல் 2026 சட்டமன்ற தோ்தல் தொடா்பான சந்தேங்களை கேட்கவும், புகார்களை தெரிவிக்கவும் அண்ணா அறிவாலயத்தில் தோ்தல் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் கட்டுபாட்டு அறையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டார். பின்னா் அழைப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.

