சாதி, மதத்தால் மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது- மு.க.ஸ்டாலின்
2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மக்கள் பணிக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்… மறக்க முடியாத குரல் இது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மக்கள் பணிக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டேன். இரண்டு ஆண்டுகளை முடித்துவிட்டு மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். எட்டு கோடி மக்களும் நன்மை அடையும் ஆட்சியாக திமுக அரசு அமைந்துள்ளது.
மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முடியுமா? என என்னை நானே கேட்டுக்கொண்டபோது தெம்பும், தைரியமும் கொடுத்தவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய 3 பேர். ஆட்சியின் முகம் அதிகாரம் அல்ல அன்பு, சனாதனம் அல்ல சமூகநீதி அதனால், சிலரால் அரசு விமர்சிக்கப்படுகிறது சிலரால் நேசிக்கப்படுகிறது.

திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சிதான் பதில். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் திறக்குறள் போல எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல். மக்களுக்கு சம்தம் இல்லாத பதவியில் இருப்பவர்களை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை செயற்கையாக வரவழைக்க முடியாது. மக்களின் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி. மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரையும் கை தூக்கி விடும் அரசு தான் திமுக அரசு. ஆட்சியின் முகம் அதிகாரம் அல்ல அன்பு, சனாதனம் அல்ல சமூகநீதி அதனால், சிலரால் அரசு விமர்சிக்கப்படுகிறது சிலரால் நேசிக்கப்படுகிறது.
2 ஆண்டு சாதனைகளை நான் சொல்லி முடிக்க வேண்டும் என்றால் நீங்கள் 2 நாட்கள் இங்கேயே தங்கி கேட்க வேண்டி இருக்கும். இருண்டு கிடந்த தமிழ்நாட்டில் விடியலை ஏற்படுத்தியுள்ளோம். மக்களின் மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் என்னை இன்னும் உழைக்க ஊக்குவிக்கும், உங்களில் ஒருவனாக உங்களோடு ஒருவனாக இருப்பேன். அனைவருக்குமான வளர்ச்சியைக் கொண்டு செயல்படுவது திமுக அரசு. சாதி, மதத்தால் மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு திராவிட மாடல் என்றால் புரியாது, மக்களுக்கு சம்பந்தமில்லாத பொறுப்பில் உள்ளவர்களுக்கு திராவிட மாடல் என்றால் தெரியாது. மக்களுக்கு பணியாற்றுவது எனக்கு புதிதல்ல, சிறுவனாக இருந்துபோதே திராவிட இயக்கத்திற்கு என்னை ஒப்படைத்துக் கொண்டேன். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேருக்கும் தான் நான் முதலமைச்சர், அவர்களுக்காக ஓய்வின்றி என் சக்திக்கும் மீறி பணியாற்றி வருகிறேன்” என்றார்.