திமுக – அதிமுக இடையே ரகசியக் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறிய குற்றச்சாட்டிற்கு, “அவர் ஆளுங்கட்சியின் நிழலில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசுவார்” என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முக்கிய நிர்வாகியும் சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரத்திடம், “திமுக மற்றும் அதிமுக இடையே ரகசியக் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது” என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் சமீபத்தில் தெரிவித்த கருத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
தளவாய் சுந்தரம் அளித்த காரசார பதிலடி
திருமாவளவனின் இந்தக் குற்றச்சாட்டைக் முற்றிலுமாக மறுத்துத் தள்ளிய தளவாய் சுந்தரம் கூறியது, “திருமாவளவன் தற்போது ஆளுங்கட்சி கூட்டணியில் இணைந்து, ஆட்சி மற்றும் அதிகாரத்தின் நிழலில் பாதுகாப்பு தேடிக் கொண்டிருக்கிறார். அதனால், தனது அரசியல் ஆதாயத்திற்காகவும் திசைதிருப்பல் அரசியலுக்காகவும் அவர் எதை வேண்டுமானாலும் பேசுவார். திமுக – அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது என்று அவர் கூறுவதில் எள்ளளவும் உண்மையோ, ஆதாரமோ இல்லை. அது முற்றிலும் கற்பனையான, அடிப்படையற்ற குற்றச்சாட்டு.” என தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளாா்.

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு
தமிழகத்தின் இரு துருவக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையே பின்னணியில் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடந்ததாகத் திருமாவளவன் கொளுத்திப்போட்டத் திரி ஏற்கெனவே அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருந்தது. இந்நிலையில், அதற்கு அதிமுக தரப்பில் இருந்து தளவாய் சுந்தரம் அளித்துள்ள இந்த அதிரடி மற்றும் காரசாரமான பதிலடி, தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பையும் காரசார விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
நீட் தேர்வை அறவே ஒழிக்க வேண்டும்! டெல்லி போராட்டத்திற்கு த.வெ.க. ஆதரவு: விஜய் அறிக்கை!
