Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டு MSME-களுக்கு எச்சரிக்கை மணி! கே.இ. ரகுநாதன் வெளியிட்ட முக்கிய தகவல்

தமிழ்நாட்டு MSME-களுக்கு எச்சரிக்கை மணி! கே.இ. ரகுநாதன் வெளியிட்ட முக்கிய தகவல்

-

- Advertisement -

ஆந்திர அரசு முதலில் கோவையில், இப்போது சென்னையில் — தமிழகத்தில் இயங்கும் MSME-களை குறிவைத்து நேரடியாக சந்தித்து, உள்கட்டமைப்பு, துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்ட வசதிகளை முன்வைத்து முதலீடுகளை ஈர்க்க தீவிரமாக களமிறங்கியுள்ளது.

we-r-hiring

தமிழக MSME-களுக்காக நமது அரசு இதுபோன்ற நேரடி உறுதியளிக்கும் சந்திப்புகளை நடத்துகிறதா?

இங்கே MSME-கள் நீண்டகாலமாக கோரும் EB Fixed Charges குறைப்பு, Peak Hour Charges நிவாரணம் போன்ற அடிப்படை கோரிக்கைகளுக்கே இன்னும் தீர்வு இல்லை.

ஒருபுறம் ஆந்திரா பெருநிறுவன முதலீடுகளை தமிழகத்துடன் போட்டிபோட்டு ஈர்க்கிறது. மறுபுறம் தமிழக MSME-களையே நேரடியாக அணுகி அழைக்கிறது.

இதே அலட்சியம் தொடர்ந்தால், MSME முதலீடுகள் மட்டுமல்ல — தொழில்களே தமிழகத்திலிருந்து இடம்பெயரும் அபாயம் உள்ளது.

வந்த முதலீட்டை கொண்டாடுவது மட்டும் வளர்ச்சி அல்ல; இருக்கும் தொழில்களை தக்கவைப்பதும் அரசின் முக்கிய கடமை!

தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.

நாம் என்ன செய்யப் போகிறோம்?

கோயில்களைக் குறிவைக்கும் சதி! சட்டமன்றத்தில் வாயடைத்துப் போன திமுகவும், முழக்கமில்லாத திராவிடமும் – மூத்த அரசியல் விமர்சகர் மருதையன் அதிரடி பேட்டி

MUST READ