Homeசெய்திகள்தமிழ்நாடு52 முக்கியக் கோயில்களில் செல்போன்களுக்குத் தடை: இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு இயக்குநர் சீனு ராமசாமி...

52 முக்கியக் கோயில்களில் செல்போன்களுக்குத் தடை: இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு இயக்குநர் சீனு ராமசாமி வரவேற்பு!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஆன்மீகத் தலங்களில் அமைதியையும் வழிபாட்டுச் சூழலையும் பராமரிக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலைக் கோயில்களில் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்ல இன்று முதல் முழுமையான தடை அமலுக்கு வந்துள்ளது.52 முக்கியக் கோயில்களில் செல்போன்களுக்குத் தடை: இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு இயக்குநர் சீனு ராமசாமி வரவேற்பு!

தடை அமலாகும் முக்கியக் கோயில்கள்
இத்திட்டம் முதற்கட்டமாகப் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும் முக்கியத் திருக்கோயில்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

we-r-hiring

முருகன் கோயில்கள்: திருத்தனி, திருப்பரங்குன்றம், வடபழனி, குன்றத்தூர் உள்ளிட்ட புகழ்பெற்ற திருத்தலங்கள்.

அம்மன் மற்றும் இதர கோயில்கள்: பெரியபாளையம், காஞ்சிபுரம், திருவேற்காடு, திருவல்லிக்கேணி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 52 முதுநிலைக் கோயில்கள் இதில் அடங்கும்.

பாதுகாப்பு பெட்டக வசதி மற்றும் அபராதம்
பக்தர்களின் வசதிக்காகக் கோயில் வளாக வாசலிலேயே செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான சிறப்புப் வைப்பகங்கள் (Locker/Cloakroom) அமைக்கப்பட்டுள்ளன.

கட்டணம் மற்றும் நடைமுறை: பக்தர்கள் தங்களது செல்போன்களை ஒப்படைத்து, ரூ.5 கட்டணம் செலுத்தி அதற்கான ரசீது அல்லது டோக்கனைப் பெற்றுக் கொள்ளலாம். சாமி தரிசனம் முடிந்து திரும்பும்போது, அந்தத் டோக்கனைக் காண்பித்துத் தங்களது செல்போன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

அபராத எச்சரிக்கை: இந்தத் தடையையும் மீறி கோயில் வளாகத்திற்குள் செல்போன்களைப் பயன்படுத்தினால் அல்லது மறைத்து எடுத்துச் சென்றால் தகுந்த அபராதம் விதிக்கப்படும் என அறநிலையத்துறை எச்சரித்துள்ளது.

இயக்குநர் சீனு ராமசாமி வரவேற்பு
இந்து சமய அறநிலையத்துறையின் இந்த புதிய நடவடிக்கைக்குத் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி தனது மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ‘எக்ஸ்’ (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,  “கோயிலுக்குள் நுழையும்போது வாசலில் செருப்பைக் கழற்றி வைப்பதைப் போல, 52 கோயில்களில் செல்போன் தடை என்பது தொலைந்துபோன நம் அமைதியை மீட்டெடுக்கக் கிடைத்த அரிய வாய்ப்பு. கேமரா ஃப்ளாஷ்கள் இல்லாத சந்நிதியில், நாம் இழந்துபோன நிசப்தம் மீண்டும் திரும்புவதை உணர்கிறோம்.

கூட்டம் வேகமாக நகர்வதற்கும், அருகில் இருப்போர் உரக்கப் பேசும் தொந்தரவைத் தவிர்ப்பதற்கும், செல்போன் திரையைத் தாண்டி சக மனிதரின் அன்பைப் புரிந்துகொள்ளவும், கோயில்களை ‘ரீல்ஸ்’ வீடியோக்களுக்காகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் வழிவகுத்த இந்த நல்ல மாற்றத்திற்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு நன்றி. வாழ்த்துகள்!” என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், கோயில்களில் ‘ரீல்ஸ்’ மோகமும், செல்போன் உரையாடல்களும் அதிகரித்து வந்த சூழலில், ஆன்மீகச் சூழலைப் பாதுகாக்கும் இந்த நடைமுறைக்கு ஆன்மீக அன்பர்களும் பொதுமக்களும் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

“தமிழ்நாட்டில் நடப்பது தற்குறிகளின் ஆட்சி!” – முதல்வர் விஜயையும் தவெக அரசையும் கடுமையாக சாடிய டிடிவி தினகரன்

MUST READ