சட்டப்பேரவையின் மாண்பு மற்றும் ஜனநாயகம் கேள்விக்குள்ளாகும் வகையில் தற்போதைய அவ நடவடிக்கைகள் மாறிவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் விவாதங்கள் மற்றும் ஆளும் தரப்பின் அணுகுமுறை குறித்துத் தனது அதிருப்தியை வெளியிட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கும் இடமாக இருக்க வேண்டும்.
ஆனால், தற்போது சட்டமன்றத்தின் மாண்பே கேள்விக்குள்ளாகும் வகையில் அவையின் நடவடிக்கைகள் மாறிவிட்டன” என்று குற்றம்சாட்டினார்.
இடைத்தேர்தல் கேள்விக்கு மௌனம்
செய்தியாளர் சந்திப்பின் போது, “தமிழகத்தில் காலியாக உள்ள 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
ஆனால், இந்த இடைத்தேர்தல் குறித்த கேள்விக்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எவ்விதப் பதிலையும் அளிக்காமல் மௌனம் காத்தார்.
சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்துத் திமுக தலைவர் தெரிவித்துள்ள இந்தக் கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பரவலான விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
