
பிரதமர் நரேந்திர மோடியின் ஆவணப்படம் தொடர்பான, அவதூறு வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்க பி.பி.சி. நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளது.
கள்ளச்சாராய விற்பனை ஒழிப்பு- டாஸ்மாக் வருவாய் அதிகரிப்பு
சர்வதேச செய்தி நிறுவனமான பி.பி.சி., சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட்டு, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குஜராத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று பி.பி.சி. நிறுவனத்திற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
புழல் ஏரிக்கு பூண்டி ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வாதங்களைப் பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, இந்த விவகாரம் குறித்து பதிலளிக்க பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். பின்னர், இந்த வழக்கின் மேல் விசாரணை செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.