Homeசெய்திகள்தமிழ்நாடுபுழல் ஏரிக்கு பூண்டி ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

புழல் ஏரிக்கு பூண்டி ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

-

- Advertisement -

புழல் ஏரிக்கு பூண்டி ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

தமிழகத்தில் சென்னை நகர மக்களின் முக்கிய  குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி அமைந்துள்ளது. இதில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

புழல் ஏரிக்கு பூண்டி ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
ஏரி

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த ஒன்றாந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நான்காம் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்துள்ளது. ஆரம்பத்தில் வினாடிக்கு இருபது கனஅடி வீதம் நீர் வந்து சேர்ந்துள்ளது.

புழல் ஏரிக்கு பூண்டி ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
தண்ணீர் திறப்பு நிறுத்தம்

அதன் பின்னர் நீர் வரத்து அதிகபட்சமாக வினாடிக்கு 310 கனஅடி வீதம் வந்து சேர்ந்தது. இந்நிலையில் ஆந்திர விவசாயிகள் சாகுபடிக்கு கிருஷ்ணா தண்ணீரை எடுத்து வருவதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

புழல் ஏரிக்கு பூண்டி ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
தண்ணீர் திறப்பு நிறுத்தம்

இன்று காலை வினாடிக்கு 85 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. கிருஷ்ணா நீர் வரத்து குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. நீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை ஆறு மணி நிலவரப்படி நீர்மட்டம் 26. 55 அடியாக பதிவாகியுள்ளது. 1.071 டி. எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 13 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

MUST READ