
இன்று (ஜூன் 02) காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டப் புகைப்படக் கண்காட்சியை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ணன் காந்தி முன்னிலையில் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மருத்துவர் இரா.செல்வராஜ் இ.ஆ.ப., பல்வேறு துறைச் செயலாளர்கள், செய்தி, மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.