மகேஷ் பாபுவின் ‘குண்டூர் காரம்’ படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ‘சர்க்காரு வாரிபட்டா’ படத்திற்கு பிறகு தற்போது குண்டூர் காரம் திரைப்படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தை அலா வைகுந்தபுரம்லூ படத்தை இயக்கிய திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார். ஹாரிக்கா & ஹசைன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே தொடங்க வேண்டிய நிலையில் ஒரு சில காரணங்களால் இதன் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டேவும் இசையமைப்பாளராக தமனும் பணியாற்ற இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.
ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் மற்றும் கால்ஷீட் குறித்த காரணங்களுக்காக பூஜா ஹெக்டே இந்த படத்தில் இருந்து வெளியேறி இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
மேலும் வேறு ஒரு சில காரணங்களால் இசை அமைப்பாளர் தமன் வெளியேறி அனிருத் இசை அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பூஜா ஹெக்டேவிற்கு பதிலாக, வாத்தி விருப்பாக்ஷா உள்ளிட்ட படங்களில் நடித்த சம்யுக்தா குண்டூர் காரம் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இது சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.