துல்கர் சல்மான் தற்போது பான் இந்தியா நடிகராக உருவெடுத்துள்ளார். இவரை இவரின் நடிப்பில் வெளிவரும் பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றி பெறுகிறது. அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சீதாராமன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இந்நிலையில் துல்கர் சல்மான் ‘கிங் ஆப் கோத்தா‘ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் அபிலாஷ் ஜோசி இயக்குகிறார் இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ரித்திகா சிங், சபீர் கல்லாரக்கல், பிரசன்னா, அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
வேப்பரர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரகுமான் இணைந்து இதற்கு இசை அமைக்கின்றனர்.
ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் இந்த படம் வருகின்ற ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படம் மலையாளத்தில் தயாராகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
இதன் கூடுதல் தகவலாக தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
இந்த டீசரில் மிரட்டலான பின்னணி இசையுடன் மாஸான ஆக்சன் காட்சிகள் நிறைந்துள்ளது. மேலும் துல்கர் சல்மானின் “இது காந்திகிராமம் இல்ல, கோதா உடையது. நான் சொன்னா பகலா மாறும், நான் சொன்னா இரவா மாறும்” என்ற வசனங்களும் இடம் பெற்றுள்ளன.
மிரட்டலாக வெளிவந்திருக்கும் கிங் ஆப் கோத்தா படத்தின் டீசர் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.