
கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையின் உயரதிகாரிகள், சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன், அவர் தற்கொலை செய்துக் கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“பொதுநல மனுக்களால் நாங்கள் சோர்வடைந்துவிட்டோம்”- உச்சநீதிமன்ற நீதிபதிகள்!
கடந்த 2009- ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். முடித்த விஜயகுமார், காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து, சென்னையில் காவல்துறை துணை ஆணையராகப் பதவி வகித்த விஜயகுமார், கடந்த ஜனவரி மாதம் கோவைக்கு டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.
கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலைக்கு குடும்ப பிரச்சனை மற்றும் மன அழுத்தமே காரணம் என்றும், பணிச்சுமை காரணம் இல்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
செந்தில் பாலாஜிக்கு பதிலாக அமைச்சர் முத்துசாமி நியமனம்!
விஜயகுமார் தற்கொலை தொடர்பாக, சட்டம்- ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. அருண் விசாரணை செய்ய உள்ளார் என்று தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.