முதியோர் உதவி தொகை ரூ.1200 ஆக உயர்வு- தங்கம் தென்னரசு
முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு உதவித்தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிட பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாட்டில் முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகப்பு திட்டத்திற்கு உதவித்தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்த்தி வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500-ஆக உயர்த்தப்படும். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து முதியோருக்கான உதவித்தொகை உயர்த்தியது நடைமுறைக்கு வரும். முதியோர் உதவித்தொகை உயர்வின் மூலம் அரசுக்கு ரூ.845 கோடி கூடுதலாக செலவாகும். முதியோர் உதவித்தொகை மூலம் 30 லட்சம் பயனாளிகள் பலன் பெற்றுவருகின்றனர். ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து காத்திருக்ககூடியவர்களுக்கும் விரைவில் ஓய்வுதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக, 3 கட்டங்களாக முகாம்கள் நடத்தப்படவுள்ளன. திங்கட்கிழமையில் இருந்து கலைஞரின் மகளிர் உரிமைத் தொகைக்கான முகாம்கள் நடத்தப்படும். மகளிர் உரிமைத்தொகை தகுதியான அனைத்து மகளிருக்கும் வழங்கப்படும். பயனாளிகள் எண்ணிக்கை குறைகிறது என்பது கணக்கில் கிடையாது. தகுதியான ஒருவர் கூட விடு மாட்டார்கள். மணிப்பூர் விவகாரம் பற்றி அதிமுக இதுவரை வாய் திறக்காதது அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. மணிப்பூர் விவகாரத்தை கண்டிக்காமல் எதிர்க்கட்சி தலைவர் அமைதி காப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.