Homeசெய்திகள்தமிழ்நாடுஆடி அமாவாசை: அக்னி தீர்த்தத்தில் நீராடி திதி கொடுத்து வழிபாடு!

ஆடி அமாவாசை: அக்னி தீர்த்தத்தில் நீராடி திதி கொடுத்து வழிபாடு!

-

- Advertisement -

 

ஆடி அமாவாசை: அக்னி தீர்த்தத்தில் நீராடி திதி கொடுத்து வழிபாடு!
File Photo

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 16) ஆடி அமாவாசையையொட்டி, நீர்நிலைகளில் பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

we-r-hiring

வாஜ்பாய் நினைவுத் தினம்- குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை!

ஆடி அமாவாசையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டுள்ளதால், அங்கு கடும் வாகனம் நெரிசல் நிலவுகிறது. 300- க்கு திதி கொடுத்து வழிபடுவதற்காக, அங்கு வடமாநிலங்களைச் சேர்ந்த மக்களும் அதிக அளவில் திரண்டுள்ளனர்.

அதிகாலை முதலே அவர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி திதி கொடுத்து, வழிபாடு செய்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்துக் கொண்டே இருப்பதால், ராமேஸ்வரத்தின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

கூட்டம் அதிகளவில் இருப்பதால் கூடுதலாக சிசிடிவி கேமராக்களை வைத்து காவல்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

மழை, காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கித் தவிக்கும் மக்கள்!

ராமநாதபுரம் மட்டுமின்றி சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினரும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ