Homeசெய்திகள்இந்தியாமீனவர் வலையில் சிக்கிய 2,000 கிலோ திமிங்கலம்

மீனவர் வலையில் சிக்கிய 2,000 கிலோ திமிங்கலம்

-

- Advertisement -

மீனவர் வலையில் சிக்கிய 2,000 கிலோ திமிங்கலம்

ஆந்திராவில் மீனவர் வலையில் 2 ஆயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் சிக்கியுள்ளது.

Chirala: వల బలంగా అనిపిస్తే పెద్ద.. పెద్ద చేపలు చిక్కాయని ఆనందపడ్డారు.. కానీ సీన్ రివర్స్

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் கோட்டப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கம்போல் கடலில் மின் பிடிக்க படகில் சென்றனர். மீனுக்காக காத்திருந்த மீனவர்களின் வலையில் மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவர்கள் மகிழ்ச்சி சில நிமிடங்கள் மட்டுமே இருந்தது காரணம் வலையில் இருந்தது மிகப்பெரிய திமிங்கலமாக ஆகும். எனவே அந்த திமிங்கலத்தை வலையில் இருந்து பிரித்து கடலில் விட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் முடியாமல் போனது.

we-r-hiring

Fishermen

இதனால் வேறு எதுவும் செய்ய முடியாமல் அருகில் உள்ள கடற்கரைக்கு மீனவர்கள் படகுடன் வந்தனர். இருப்பினும் அந்த திமிங்கிலம் உயிருடன் இருந்ததால் மீனவர்கள் மிகுந்த சிரமத்துடன் திமிங்கலத்தை வலையில் இருந்து பிரித்து மீண்டும் கடலுக்கு கொண்டு சென்று விட்டனர். 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட திமிங்கலம் கிடைத்தும் மீனவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

MUST READ