Homeசெய்திகள்விளையாட்டுகார் தீப்பிடித்து எரிந்ததில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயம்

கார் தீப்பிடித்து எரிந்ததில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயம்

-

- Advertisement -

உத்தர்கண்ட் மாநிலத்தில் சாலை தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயம் அடைந்தார்.

ரிஷப்

டெல்லியில் இருந்து உத்தர்கண்ட் மாநிலத்திற்கு கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் காரில் சென்ற்கொண்டிருந்தார். அப்போது, திடீரென தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்து ரிஷப் பண்ட் தலையில் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

ரிஷப் பந்த் சென்ற கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது. மேலும், அவர் மருத்துவமனையில் ரத்த வெள்ளத்தில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைந்து குணமடைய வேண்டும் என பலர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கார் விபத்தில் படுகாயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். காரில் இருந்த மற்றவர்களுக்கும் உயிருக்கு ஆபத்தான நிலை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

MUST READ