spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு

இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு

-

- Advertisement -

இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு

நாகை மீனவர்கள் நேற்று கடலில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!
File Photo

நாகை அடுத்த செருதூர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர் நேற்று சபாபதி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கோடியாகரைக்கு தென்கிழக்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் 7 பேர் மீனவர்களின் படகை சுற்றி வளைத்து படகில் ஏறி மீனவர்களை பயங்கர ஆயுதங்களால் தாக்கி படகில் இருந்த 4 செல்போன்கள், ஜி.பி.எஸ் கருவி, 500 கிலோ வலைகள் உள்ளிட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்களை பறித்துக் கொண்டு தாக்கி விரட்டி அடித்தனர்.

மீனவர்கள் உடனடியாக அவசரம் அவசரமாக கரைக்கு வந்த பிரதீப், பிரகாஷ், பிரவீன், திருமுருகன் ஆகிய 4 மீனவர்களும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் அடையாளம் தெரியாத இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழிபறி மற்றும் ஆயுதங்களால் தாக்குதல் என வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

MUST READ