
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் மன்சூர் அலிகானின் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட நடிகை திரிஷா!
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (நவ.25) காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 06.00 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 199 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 51,000- க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மொத்தம் 5.25 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
கார்த்திக்கு ஜோடியாகும் பிரபல சீரியல் நடிகை….. யார் தெரியுமா?
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மாநில காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் என சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் டிசம்பர் 03- ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.